மயிலாடுதுறை, ஜூலை 8 - மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளி டம் ஒன்றியம் மாதானம் அருகே யுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில், குடியிருக்க இடம் கேட்டு பட்டியலின மக்கள் அரசு புறம்போக்கு இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடத்தி வரும் குடியேறும் போராட்டம், திங்க ளன்று 3 ஆவது நாளை எட்டியது. இரவு-பகலாக அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு அதிகாரிகள் இது வரை வந்து சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறியாமல் அலட்சியப் படுத்துகின்றனர்.
கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை யில் 300-க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலை யில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் திங்களன்று போராட்டக் களத்திற்கு நேரில் வந்து, கோரிக்கைகளோடு காத்திருக்கும் மக்களை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், “குடியிருக்க இடம் கேட்டு பட்டியலின மக்கள் பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், அரசு அதிகாரிகள் கையூட்டு வாங்கிக் கொண்டு, சட்ட விரோதமாக பணக்கார நபர் ஒரு வருக்கு சம்பந்தப்பட்ட அரசு புறம்போக்கு இடத்தை தாரைவார்க்க முயற்சி செய்கின்றனர்.
3.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் குடியிருக்க இடம் கேட்டு, குடிசை அமைத்து போராடும் 45 குடும்பங் களுக்கும் அரசு நிர்வாகம் இடத்தை பிரித்து தர வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தி லிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், தொடர்ந்து அலட்சியப்படுத்தி னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே இடத்தை பிரித்து பயனாளிகளுக்கு வழங்குவதோடு, மீதமுள்ள இடங் களை இடமில்லாமல் உள்ள பிற சமூக மக்களுக்கும் வழங்குவோம்”என்றார்.